2025 ஜூலை 24, வியாழக்கிழமை

தொலைபேசியை விழுங்கிய இளைஞர்; காரணம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பீகாரில் சிறை அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்த கைதி ஒருவர் தொலைபேசியை  விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள சிறைச்சாலையொன்றில் அடைக்கப்படிருந்த கைஷர் அலி ( Qaishar Ali ) என்ற கைதிக்கு அண்மையில்  திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் உடனடியாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் தொலைபேசி ஒன்று இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ” சிறை அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்ததால் பதற்றத்தில் தான் தொலைபேசியை விழுங்கியதாகத்” தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து  கைஷர் அலியின் வயிற்றிலிருந்து அறுவைச்  சிகிச்சை மூலம் தொலைபேசி அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .