Freelancer / 2022 நவம்பர் 24 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு மற்றும் காஷ்மீரின் (ஜே-கே) கிராமப் புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான சாத்தியமான துறைகளில் ஒன்றாக பால் பண்ணை உருவாகியுள்ளது.
ஜே-கே-யின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் தீர்மானத்தை மத்திய அரசு அறிவித்த பின்னர், மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள இளைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காக பால் பண்ணையை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் ஊக்குவித்துள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் ஒரு விவசாயப் பகுதியாகும், யூனியன் பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறை 16.18% பங்களிக்கிறது,
இதில் பால் துறை மூன்றில் ஒரு பங்குக்கு மேல் உள்ளதுடன், இப்பகுதி பால்வளத் துறையின் அபிவிருத்திக்கு பெரும் வாய்ப்பை வழங்குகிறது மற்றும் அரசாங்கம் அந்த திறனை ஆராய்ந்து வருகிறது.
ஜே-கே மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் கிராமப் புறங்களில் வாழ்கின்றனர், மேலும் 60 சதவீத வருவாய் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையால் உருவாக்கப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பால் பண்ணையானது கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு மேலதிக வருமானம் தரக்கூடிய ஆதாரமாக உருவெடுத்துள்ளது.
நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் பல திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் அதற்கு ஒரு திருப்பத்தை அளித்துள்ளது.
ஐந்து மாடுகள் கொண்ட பால் பண்ணை அமைப்பதற்கு, ஆண் தொழில்முனைவோருக்கு, 1.75 இலட்சம் ரூபாய் மானியமும், பெண் தொழில்முனைவோருக்கு, ஐந்து மாடுகளுடன் பால் பண்ணை அமைக்க, 2 இலட்சம் ரூபாய் மானியத்தையும் அரசு வழங்குகிறது.
அரசாங்கம் விவசாயிகளுக்கு பால் ஏடிஎம்களை வழங்குகிறது மற்றும் இந்த இயந்திரங்களில் அவர்கள் சாத்தியமான மானியங்களைப் பெறுகிறார்கள்.
காஷ்மீரில் மட்டும் 500க்கும் மேற்பட்ட ஒற்றை ஐந்து மாடு அலகுகள் உள்ளதுடன், அவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் நாள் ஒன்றுக்கு 70 இலட்சம் லீற்றர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது, அதில் 40 இலட்சம் லீற்றர் காஷ்மீரிலும், 30 லட்சம் லீற்றர் ஜம்மு பிராந்தியத்திலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் பால் விலை உயர்ந்து வருகிறது. 2019 இல் நடத்தப்பட்ட 20ஆவது கால்நடை கணக்கெடுப்பின்படி, ஜம்மு காஷ்மீரில் 82 இலட்சம் கால்நடைகள் உள்ளன.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, கால்நடைகளின் மரபணு மேம்பாடு, கால்நடைத் தூண்டல், தீவன மேம்பாடு, பால் கொள்முதல், பதப்படுத்துதல் மற்றும் சுகாதார பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவம் போன்ற பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது.
மக்களின் வாழ்க்கையை இலகுவாக்க அரசாங்கம் இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன், அவர்களின் வருமானத்தை அதிகரிக்க அவர்களுக்குப் போதிய வாய்ப்புகளை வழங்கி வருகின்றது.
2019 வரை, பால் பண்ணை போன்ற கருத்துக்கள் பிரபலமாக இல்லை, ஆனால், நயா ஜம்மு மற்றும் காஷ்மீரில் பல புதிய யோசனைகள் மக்களின் தலைவிதியை மாற்றியுள்ளன.
மேலும் அவர்கள் யூனியன் பிரதேசத்தின் அமைதி, முன்னேற்றம், செழிப்பு மற்றும் அபிவிருத்தியில் சம பங்குதாரர்களாக மாறியுள்ளனர்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026