Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 நவம்பர் 03 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் கடந்த மே.18ம் திகதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் , 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததது குறிப்பிடத்தக்கது.
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து, மீதமுள்ள 6 பேர் விடுதலை தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது. இந்த தீர்ப்பை முன்னுதாரணமாக கொண்டு மற்ற 6 பேரும் தங்களை விடுதலை செய்ய கோர முடியும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று இரவு விசாரணைக்கு வருகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுக்கு மேலாக நளினி உள்ளிட்ட 6 பேர் சிறையில் உள்ளனர்.
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேரும் விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செயதனர் என்பது குறிப்பிடத்தக்கது.
29 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago