2026 மார்ச் 09, திங்கட்கிழமை

நியூஸிலாந்து அமைச்சரவையில் இந்தியப்பெண்

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 03 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 சென்னையைப் பிறப்பிடமாகவும் கேரளாவைப் பூர்விகமாகக் கொண்டவருமான பிரியங்கா ராதாகிருஷ்ணன் (41), நியூஸிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்னின் அமைச்சரவையில்  அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டில் அமைச்சர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அமைச்சரான தகவலை அவர், தனது முகநூல்    பக்கத்தில்  பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப் படுத்தியிருக்கிறார்.

 அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்   "இன்று நம்பமுடியாத சிறப்பான நாளாக இருக்கிறது. நமது அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்கான சலுகை உணர்வு உட்பட, நான் பல விஷயங்களை உணர்கிறேன். எனக்காக வாழ்த்துச் செய்திகள்  அனுப்ப நேரம் ஒதுக்கிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. மிகவும் சிரம் தாழ்ந்து இந்த பணியை ஏற்றுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

தனது புதிய அமைச்சரவையில் ஐந்து பேருக்கு ஜெசிண்டா ஆர்டெர்ன் வாய்ப்பு வழங்கியிருக்கிறார். அரசின் நலனுக்காக கடுமையாக உழைத்தவர் பிரியங்கா என்று ஜெசின்டா ஆர்டெர்ன் புகழாராம் சூட்டினார்.

 நியூஸிலாந்து தொழிலாளர் கட்சியில் 2006ஆம் ஆண்டில் அவர் இணைந்தார்.   பெண் உரிமைகள், குடும்ப வன்முறை, குடியேறி தொழிலாளர்கள் ஆகியோருக்காக குரல் கொடுத்த அவர் தீவிர அரசியலிலும் பங்கெடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .