Freelancer / 2024 நவம்பர் 26 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
விமானத்தில் பாம்புகளை கடத்திய பெண்கள் இருவர், தெலுங்கானா மாநிலம், ஷாம்ஷாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், ஷாம்ஷாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில், பேங்கொக்கில் இருந்து வந்த விமானத்தில் 2 பெண் பயணிகள் வித்தியாசமான பெரிய கூடை ஒன்றை வைத்திருந்தனர்.
அதனை கண்ட சுங்க அதிகாரிகள், அந்த கூடைகளை பறிமுதல் செய்து சோதனையிட்டனர். அதில் 2 பாம்புகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள் பாம்புகளுடன் பேங்கொக்கில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் வந்துள்ளனர்.
இந்த பாம்புகள், அதிக விஷம் கொண்டவை என தெரியவந்துள்ளது. குறித்த 2 பெண்களும் விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
26 minute ago
39 minute ago
48 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
39 minute ago
48 minute ago
55 minute ago