2026 மார்ச் 09, திங்கட்கிழமை

பார்த்திபனின் ’ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை,

இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி 2019ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்துக்கு மத்திய அரசின் விருது அறிவித்துள்ளது. இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் கடந்த ஆண்டு ஒத்த செருப்பு (சைஸ் நம்பர் 7.) என்ற படத்தை இயக்கி இருந்தார்.

அதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இருந்தார். இந்திய சினிமாவில் இது புதிய முயற்சி என்று பலரும் பாராட்டினர்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது மத்திய அரசின் விருதுக்கு ‘ஒத்த செருப்பு’ தேர்வாகி உள்ளது.

இதேபோல் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய 'ஹவுஸ் ஓனர்' என்ற தமிழ் திரைப்படத்துக்கு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த திரைப்படமும் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .