2026 மார்ச் 09, திங்கட்கிழமை

’புதிய பீகாரொன்றைக் கட்டியெழுப்புங்கள்’

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி,

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு  இன்று காலை தொடங்கியது.

71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்பு மற்றும் கொரோனா முன்னெ ச்சரிக்கை விதிகளைப் பின்பற்றி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  சோனியா காந்தி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “ நிதீஷ் குமார் தலைமையிலான தற்போதைய அரசு, மக்களுக்கு நன்மையான திட்டங்களைச் செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தொழிலாளர்கள், விவசாயிகள் இளைஞர்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறிய சோனியா காந்தி,  பீகார் மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி 'புதிய பீகார்' ஒன்றைக் கட்டியெழுப்புமாறு, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .