Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 348 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய உட்துறை அமைச்சானது தகவல்வெளியிட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ”இந்தியாவில் 2018-19 ஆம் ஆண்டில், பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 136 பேர் உயிரிழந்தனர் எனவும் சித்திரவதைக்கு ஆளானோர் எண்ணிக்கை 542 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2019-20 ஆம் ஆண்டில் இவ்வாறு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு மரணமடைந்தோர் எண்ணிக்கை 112 ஆகவும், சித்திரவதை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 411ஆகவும் காணப்பட்டது எனவும் அதுபோல 2020-21 ஆம் ஆண்டில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 100 ஆகவும், சித்திரவதைக்கு ஆளானோர் எண்ணிக்கை 236 ஆகவும் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 minute ago
38 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
38 minute ago
48 minute ago