2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொலிஸ் தடுப்புக் காவலில் 348 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் பொலிஸ் தடுப்புக்காவலில்  வைக்கப்பட்டிருந்த 348 பேர் உயிரிழந்துள்ளனர்  என மத்திய உட்துறை அமைச்சானது  தகவல்வெளியிட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ”இந்தியாவில்  2018-19 ஆம் ஆண்டில், பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 136 பேர் உயிரிழந்தனர் எனவும்  சித்திரவதைக்கு ஆளானோர் எண்ணிக்கை 542 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2019-20 ஆம் ஆண்டில் இவ்வாறு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு மரணமடைந்தோர்  எண்ணிக்கை 112 ஆகவும், சித்திரவதை செய்யப்பட்டவர்கள்  எண்ணிக்கை  411ஆகவும்  காணப்பட்டது எனவும் அதுபோல 2020-21 ஆம் ஆண்டில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 100 ஆகவும், சித்திரவதைக்கு ஆளானோர் எண்ணிக்கை 236 ஆகவும் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .