2025 ஜூலை 16, புதன்கிழமை

லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு தடை

Freelancer   / 2023 நவம்பர் 22 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு  2008-ம் ஆண்டில் மும்பையில் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நாட்டவர் உட்பட 175 பேர் கொல்லப்பட்டனர். இதன் 15-வது ஆண்டு நினைவுதினம் வரவுள்ள நிலையில், புதுடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் செவ்வாய்க்கிழமை (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2008 நவம்பரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பால் நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதல் மற்றும் அதன் கொடூரமான நடவடிக்கைகள், அமைதியை நாடும் நாடுகள் மற்றும் சமூகங்களில் இன்னும் எதிரொலிக்கின்றன.

லஷ்கர் இ தொய்பா தடைசெய்யுங்கள் என்று இந்தியாவின் தரப்பில் கோரிக்கை வரவில்லையென்றாலும், அதை நாங்களாகவே தடை செய்துள்ளோம். தீவிரவாதத்தை வேரறுக்க உலக நாடுகளுடன் இணைந்து இஸ்ரேல் எப்போதும் போரிடும். என தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X