A.K.M. Ramzy / 2021 ஜனவரி 02 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
சென்னையில் வீதிகளில் குப்பையைக் கொட்டி பொதுமக்கள் அசுத்தம் செய்யும் இடங்களில், மார்கழி கோலமிட்டுத் தடுக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2000ஆம் ஆண்டே திடக்கழிவு மேலாண்மை விதிகளை மத்திய அரசு கொண்டுவந்தாலும், உள்ளாட்சி அமைப்புகள் இதை முறையாக செயல்படுத்தவில்லை. 2016ஆம் ஆண்டு திருத்தப்பட்ட விதிகள் அமுலுக்கு வந்த பின்னும் பெரிய முன்னேற்றம் இல்லை. இதனிடையே மத்திய அரசு, ’தூய்மை இந்தியா’ இயக்கத்தை தொடங்கி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கின.
இதன் பலனாக, சென்னை மாநகராட்சி முழுவதும் தினமும் சேகரிக்கப்படும் 5 ஆயிரம் தொன் குப்பை கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு சென்ற நிலையில், அதில் 725 தொன் குப்பை இயற்கை உரமாகவும், உயிரி எரிவாயுவாகவும் மறுசுழற்சிக்கு உகந்த பொருளாகவும் மாற்றப்படுகிறது.
சென்னையில் வீடு வீடாக வந்துகுப்பையைப் பெறுவதும் அமுலுக்கு வந்தாலும்கூட பொது மக்கள்கோவில், பள்ளி, மின்மாற்றிகளின் அருகில் குப்பையைக் கொட்டுகின்றனர். இதைத் தடுக்க, மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டல 92ஆவதுவார்டு தூய்மை ஆய்வாளர் ஈ.கீதாவின் முயற்சியில், அப்பகுதிகளில் மார்கழி கோலமிட்டு வருவது வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை பின்பற்றி தற்போது பல வார்டுகளில் பொதுமக்கள் குப்பை கொட்டும் இடங்களில் கோலமிடப்படுகிறது.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026