2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (01.09.2011)

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (01.09.2011)

இன்று கர வருடம் ஆவணி மாதம் 15ஆம் நாள் (01.09.2011) வியாழக்கிழமை. சித்த யோகமும் சதுர்த்தி திதியும் ஹஸ்தம் நட்சத்திரம் காலை 08.36 அணிவரை பின்பு சித்திரை.

ராகு காலம்: காலை 01.30 முதல் 03.00 மணிவரை.
எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணிவரை, இரவு 10.30 முதல் 12.00 மணிவரை.


விநாயக சதுர்த்தி, வளர்பிறை சுபமுகூர்த்த தினம்.  

நல்ல நேரம்: காலை 10.45 - 11.45 மணிவரை, மாலை 12.15 முதல் 1.15 மணிவரை.


மேடம்
பகைவர்களுடன் அதிக பேச்சுக்களினால் மனஸ்தாபம் ஏற்படும், பணவரவு ஏற்படுதல், புதிய சாதனைகளை மேம்படுத்தல்
அஸ்வினி: அதிர்ஷ்டம்
பரணி: நன்மை
கிருத்திகை 1ஆம் பாதம்: பகை


இடபம்
சேமிப்புக்கள் குறைவாக காணப்படும், விடாமுயற்சியுடன் செயற்படவும், வெளிதேசங்களிருந்து செய்தி வருதல்.
கிருத்திகை 2, 3, 4: ஊக்கம்
ரோகிணி: தகவல்
மிருகசீரிடம் 1, 2: தாமதம்


மிதுனம்
தியானங்கள் வழிபாடுகள் மன ஆறுதலை தரும், தொலைந்த பொருள் கிடைத்தல், மனதில் சோர்வுகள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: கலக்கம்
திருவாதிரை: அமைதி
புனர்பூசம்: சுபம்


கடகம்
வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் கிடைத்தல், தனலாபம் ஏற்படும், குடும்பத்தில் உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சி.
புனர்பூசம்: குதூகலம்
பூசம்: இலாபம்
ஆயில்யம்: புதியவழி


சிம்மம்
உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல், புதிய முயற்சிகள் வெற்றியை ஏற்படுத்தும், பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.
மகம்: ஆலோசனை
பூரம்: சுகயீனம்
உத்திரம் 1ஆம் பாதம்: முன்னேற்றம்


கன்னி  
நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபடுதல், தூய்மையான ஆடை அணிதல், குடும்ப உறவினர்களினால் உற்சாகம் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: சுபம்
அஸ்தம்: தெளிவான சிந்தனை
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி


துலாம்
மனதில் சிறு சலனங்கள் தோன்றும், ஆச்சரியமான பொருள் காணல், குலதெய்வ வழிபாடுகள் மன அமைதி தரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நன்மை
சுவாதி: விசித்திரம்
விசாகம் 1, 2, 3: சங்கடம்


விருட்சிகம்
அழகிய ஆடை உபகரணங்கள் சேருதல், நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், மகிழ்ச்சியான செய்தி கிடைத்தல்.
விசாகம் 4: அதிர்ஷ்டம்
அனுசம்: நட்பு
கேட்டை: தகவல்


தனுசு
புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும், பணவரவு கிடைத்தல், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
மூலம்: வரவு
பூராடம்: வெற்றி
உத்திராடம் 1ஆம் பாதம்: அனுகிரகம்


மகரம்
நிம்மதியான உறக்கம் கிடைக்கும், மனதில் சோர்வுகள் நீங்கி உற்சாகம் ஏற்படும், அரசாங்க வேலைவாய்ப்புக்கள் கிடைத்தல்.
உத்திராடம் 2, 3, 4: சலுகை
திருவோணம்: புத்துணர்ச்சி
அவிட்டம் 1, 2: அமைதி


கும்பம்
பிறரின் பிரச்சினைகள் துன்பத்தை ஏற்படுத்தும், இறைவன் மீது அதிக நாட்டம் காட்டுதல்,  பெண்களுடன் வாக்குவாதம் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: மனஸ்தாபம்
சதயம்: சுபம்
பூரட்டாதி 1, 2, 3: விவாதம்


மீனம்
வியாபார வளர்ச்சி சிறப்பாக காணப்படும், நல்ல செய்திகள் உரிய நேத்தில் கிடைக்கும், சேமிப்பு அதிகரித்தல்.
பூரட்டாதி 1, 2, 3: நற்செய்தி
உத்திரட்டாதி: மேன்மை
ரேவதி: வரவு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .