2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (04.09.2011)

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (04.09.2011)

இன்று கர வருடம் ஆவணி மாதம் 18ஆம் நாள் (04.09.2011) ஞாயிற்றுக்கிழமை. மரண யோகமும் ஸப்தமி திதியும் அனுஷம் நட்சத்திரம் காலை 02.44 மணிவரை, பின்பு கேட்டை.
இராகு காலம் : காலை 04.30 முதல் 06.00 மணிவரை
எமகண்டம் : பகல் 12.00 முதல் 1.30 மணிவரை, இரவு 06.00 முதல் 07.30 மணிவரை
நல்ல நேரம் : காலை 06.00 முதல் 07.00 மணிவரை, மாலை 03.15 முதல் 04.15 மணிவரை.



மேடம்
உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும், தனவரவு ஏற்படும், பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவிடுதல்.
அஸ்வினி: அதிர்ஷ்டம்
பரணி: உற்சாகம்
கிருத்திகை 1ஆம் பாதம்: விரயம்


இடபம்
இசைத்துறையில் ஈர்ப்பு அதிகரிக்கும், புதிய இடமாற்றங்கள் லாபகரமாக அமையும், சுவையான உணவுகள் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: நன்மை
ரோகிணி: ஆகாரம்
மிருகசீரிடம் 1, 2: மனஆறுதல்


மிதுனம்
பணம் சேமிப்பதில் அதிக கவனம் தேவை, மனதால் சிறு அலைச்சல் ஏற்படும், வீண் பேச்சுக்கள் மன சங்கடத்தை ஏற்படுத்தும்.
மிருகசீரிடம் 2, 3: பகை
திருவாதிரை: கடின உழைப்பு
புனர்பூசம்: கவலை


கடகம்
அனாவசிய ஆடம்பர செலவுகளை மேற்கொள்ளல், உடல் உபாதைகள் வந்து நீங்கும், தீயவர்களினால் பிரச்சினைகள் ஏற்படும்.
புனர்பூசம்: சுகயீனம்
பூசம்: சிக்கல்
ஆயில்யம்: குழப்பம்


சிம்மம்
தொழிலில் பல புதிய வழிமுறைகளை கையாளுதல், அழகிய ஆடை, உபகரணங்கள் கிடைக்கும், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: அன்யோன்யம்
உத்திரம் 1ஆம் பாதம்: லாபம்


கன்னி 
சாப்பாட்டில் விருப்பமின்மை ஏற்படுதல், புதிய காரியங்கள் காலதாமதத்தை ஏற்படுத்தும், அறிமுகற்ற நண்பர்களின் சகவாசங்களினால் துன்பம்.
உத்திரம் 2, 3, 4: கஷ்டம்
அஸ்தம்: தோல்வி
சித்திரை 1, 2ஆம் பாதம்: வெறுப்பு


துலாம்
ஒவ்வாத உணவினால் உடல் உஷ்ணம் அதிகரித்தல், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், நல்ல செய்திகள் வந்து சேரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தகவல்
சுவாதி: நோய்கள்
விசாகம் 1, 2, 3: ஆதாயம்


விருட்சிகம்
அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல், வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், செயல்களில் தவறுகள் ஏற்படும்.
விசாகம் 4: சிரமம்
அனுசம்: செலவு
கேட்டை: மனந்தளர்வு


தனுசு
குடும்பத்தில் சுபவிசேஷங்கள் மகிழ்ச்சியை தரும், நட்பு வட்டம் விரிவடைதல், திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும்.
மூலம்: அதிர்ஷ்டம்
பூராடம்: ஒற்றுமை
உத்திராடம் 1ஆம் பாதம்: இன்பம்


மகரம்
பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் ஏற்படும், மன சஞ்சலங்கள் தோன்றி மறையும்.
உத்திராடம் 2, 3, 4: நம்பிக்கை தேவை
திருவோணம்: நிதானம்
அவிட்டம் 1, 2: கவனம்


கும்பம்
அயல் தேசங்களிலிருந்து செய்தி கிடைக்கும், புதிய சாதனைகளை பயன்படுத்துவதால் வெற்றி, எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: ஆதரவு
சதயம்: சுபம்
பூரட்டாதி 1, 2, 3: நல்ல செய்தி


மீனம்
பகைவர்களினால் இடையூறுகள் ஏற்படும், மனதில் பயம் உணர்வுகள் தோன்றும், உடலால் சில சிரமங்கள் ஏற்படும்.
பூரட்டாதி 4: குழப்பங்கள்
உத்திரட்டாதி: மனஸ்தாபம்
ரேவதி: தேகசுகம


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .