Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 செப்டெம்பர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (06.09.2011)
இன்று கர வருடம் ஆவணி மாதம் 20ஆம் நாள் (06.09.2011) செவ்வாய்க்கிழமை. அமிர்த மேல் சித்த யோகமும் நவமி திதியும் மூலம் நட்சத்திரம் காலை 01.19 மணிவரை, பின்பு பூராடம்.
இராகு காலம் : காலை 03.00 மணி முதல் 04.30 மணிவரை
எமகண்டம் : காலை 09.00 மணி முதல் 10.30 மணிவரை, இரவு 01.30 மணி முதல் 03.00 மணிவரை
குங்குலியக்கலய நாயனார் குருபூஜை
நல்ல நேரம் : காலை 07.45 மணி முதல் 08.45 மணிவரை, மாலை04.45 மணி முதல் 05.45 மணிவரை.
மேடம்
அறுசுவையான உணவு உண்ணலாம், பெண்களின் உதவிகள் மகிழ்ச்சியை தரும், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அஸ்வினி : ஆரோக்கியம்
பரணி: அனுசரிப்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: நட்பு
இடபம்
வியாபாரத்தில் நவீன சாதனங்களினால் ஆதாயம், பொருள் சேர்க்கை ஏற்படும், விநோத விளையாட்டுகளுக்கு அதிக செலவு செய்தல்.
கிருத்திகை 2, 3, 4: உயர்வு
ரோகிணி: விரயம்
மிருகசீரிடம் 1, 2: அதிர்ஷ்டம்
மிதுனம்
அயராத உழைப்பினால் நிறைவான ஆதாயம், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், அதிகாரிகளுடன் அனுசரித்து செயல்படவும்.
மிருகசீரிடம் 2, 3: உழைப்பு
திருவாதிரை: மனஅமைதி
புனர்பூசம்: பொறுமை
கடகம்
அரசாங்க வேலை வாய்ப்புக்கள் தேடி வருதல், தூய்மையான ஆடைகளை அணியலாம், நல்ல காரியங்களில் உற்சாகத்துடன் ஈடுபடுதல்.
புனர்பூசம்: வாய்ப்பு
பூசம்: புத்துணர்ச்சி
ஆயில்யம்: நிம்மதி
சிம்மம்
குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை, புதிய வேலைப் பணிகளை முன்னெடுப்பதால் வெற்றி, பெண்களின் அக்கறை அதிகரித்தல்.
மகம்: சலுகை
பூரம்: அன்யோன்யம்
உத்திரம் 1ஆம் பாதம்: புதிய வழி
கன்னி
பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை, சில இடமாற்றங்கள் ஏற்படும், இசையில் ஆர்வம் அதிகரித்தல்.
உத்திரம் 2, 3, 4: ஆற்றல்
அஸ்தம்: அவதானம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சுபம்
துலாம்
பெரியார்களின் அறிவுரைகள் நம்பிக்கையை தரும், பணவரவு ஏற்படும், புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: முயற்சி
சுவாதி: உபதேசம்
விசாகம் 1, 2, 3: வரவு
விருட்சிகம்
நிம்மதியான தூக்கம் கிடைக்கும், ஆலய ஆனுஷ்டானங்களில் ஈடுபடுவதால் நன்மை, தனலாபம் ஏற்படும்.
விசாகம் 4: வழிபாடுகள்
அனுசம்: லாபம்
கேட்டை: மனஅமைதி
தனுசு
மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், புதிய செய்திகள் வந்து சேரும்.
மூலம்: ஆதரவு
பூராடம்: நட்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: சுபம்
மகரம்
மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், தொலைதூர பயணங்கள் செல்வதால் அனுகூலம், புதிய முயற்சியினால் முன்னேற்றம்.
உத்திராடம் 2, 3, 4: நன்மை
திருவோணம்: அனுகிரகம்
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி
கும்பம்
திறமையான சாதனைகளினால் வெற்றி கிடைக்கும், கடின உழைப்பினால் அதிக லாபம், பகைவர்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும்.
அவிட்டம் 3, 4: வரவு
சதயம்: பகை
பூரட்டாதி 1, 2, 3: உயர்வு
மீனம்
நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும், வெண்மையான ஆடைகளை அணியலாம், அரசாங்க உதவிகள் கிடைக்கும்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி: வெற்றி
ரேவதி: சலுகை
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .