Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 செப்டெம்பர் 06 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (07.09.2011)
இன்று கர வருடம் ஆவணி மாதம் 21ஆம் நாள் (07.09.2011) புதன்கிழமை. அமிர்த யோகமும் தசமி திதியும் பூராடம் நட்சத்திரம் காலை 1.15 மணிவரை, பின்பு உத்திராடம்.
இராகு காலம் : காலை 12.00 மணி முதல் 1.30 மணிவரை
எமகண்டம் : காலை 07.30 மணி முதல் 09.00 மணிவரை, இரவு 12.00 மணி முதல் 01.30 மணி வரை.
நல்ல நேரம் : காலை 09.00 மணி முதல் 10.00 மணிவரை, மாலை 04.45 மணி முதல் 05.45 மணிவரை.
மேடம்
நீண்ட நாள் தொலைந்த பொருள் கிடைத்தல், பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல்.
அஸ்வினி: சஞ்சலம்
பரணி: வாக்குவாதம்
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்
இடபம்
அயல்தேசங்களிலிருந்து செய்திகள் கிடைக்கும், நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும், அதிகாரிகளுடன் சுமுகமான முறையில் செயல்படவும்.
கிருத்திகை 2, 3, 4: நிதானம்
ரோகிணி: தகவல்
மிருகசீரிடம் 1, 2: ஆகாரம்
மிதுனம்
தொழிலில் புதிய வாய்ப்புக்கள் பின்தள்ளப்படும், தீய நண்பர்களின் சகவாசங்களினால் துன்பம், அலைச்சல்கள் சற்று அதிகரித்தல்.
மிருகசீரிடம் 2, 3: தோல்வி
திருவாதிரை: சிரமம்
புனர்பூசம்: கவலை
கடகம்
உடலால் சில சிரமங்கள் ஏற்படும், பணப்பிரச்சினைகள் சங்கடத்தை ஏற்படுத்தும், பிறரின் ஆதரவுகள் கிடைக்கும்.
புனர்பூசம்: நோய்கள்
பூசம்: நஷ்டம்
ஆயில்யம்: உதவி
சிம்மம்
புதுமையான பொருள் காணக்கிடைத்தல், பிறரின் பிரச்சினைகளை பேசுவதால் சங்கடம், புண்ணிய ஸ்தலங்கள் செல்வதால் மனஅமைதி.
மகம்: சோர்வு
பூரம்: ஆச்சரியம்
உத்திரம் 1ஆம் பாதம்: கருத்து வேற்றுமை
கன்னி
அழகிய ஆடை, அணிகலன்கள் சேருதல், வியாபாரத்தில் புதிய நுட்பங்களை கையாளுதல், நண்பர்களின் ஒற்றுமை வலிமை பெறும்.
உத்திரம் 2, 3, 4: அதிர்ஷ்டம்
அஸ்தம்: நட்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆதாயம்
துலாம்
திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, சாப்பாட்டில் வெறுப்பு தன்மை, புதிய காரியங்களில் தடைகள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தடை
சுவாதி: விருப்பமின்மை
விசாகம் 1, 2, 3: கவனம்
விருட்சிகம்
கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம், நீண்ட நாள் எதிர்பார்த்த செய்தி கிடைக்கும், பணவரவுகள் தாமதத்தை ஏற்படுத்தும்.
விசாகம் 4: தகவல்
அனுசம்: விடாமுயற்சி
கேட்டை: நஷ்டம்
தனுசு
நல்ல காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும், கடின வாக்குவாதங்கள் ஏற்படும், மனகஷ்டங்கள் ஏற்படும்.
மூலம்: பிரார்த்தனைகள்
பூராடம்: நாவடக்கம்
உத்திராடம் 1ஆம் பாதம்: குழப்பம்
மகரம்
குடும்பத்தில் சுபவிசேஷங்கள் மகிழ்ச்சியை தரும், பொழுதுபோக்குகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும், தனவரவு ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: இன்பம்
திருவோணம்: குடும்ப ஒற்றுமை
அவிட்டம் 1, 2: லாபம்
கும்பம்
புதிய வேலைத்திட்டங்கள் அலைச்சலை ஏற்படுத்தும், சரும உபாதைகள் வந்து நீங்கும், பகைவர்களினால் இடையூறுகள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: களைப்பு
சதயம்: பிரச்சினைகள்
பூரட்டாதி 1, 2, 3: தேகசுகம்
மீனம்
பணம் சேமிப்பதில் அதிக ஊக்கம் தேவை, நல்ல செய்திகள் வந்து சேரும், அனாவசிய பேச்சுகளினால் மனஸ்தாபம் ஏற்படும்.
பூரட்டாதி 4: ஆர்வம்
உத்திரட்டாதி: பகை
ரேவதி: தகவல்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .