Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 செப்டெம்பர் 07 , பி.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (08.09.2011)
இன்று கர வருடம் ஆவணி மாதம் 22ஆம் நாள் (08.09.2011) வியாழக்கிழமை. சித்த யோகமும் ஏகாதசி திதியும் உத்திராடம் நட்சத்திரம் காலை 1.37 மணிவரை, பின்பு திருவோணம்.
இராகு காலம் : காலை 01.30 முதல் 03.00 மணிவரை
எமகண்டம் : காலை 06.00 முதல் 07.30 மணி வரை, இரவு 10.30 முதல் 12.00 மணிவரை
சுபமுகூர்த்த தினம்
நல்ல நேரம் : காலை 11.00 - 12.00 மணிவரை, 12.15 முதல் 1.15 மணிவரை
மேடம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், புதிய வேலைகள் பின்தள்ளப்படும், மனதில் பயம் உணர்வுகள் தோன்றும்.
அஸ்வினி: கலக்கம்
பரணி: செலவு
கிருத்திகை 1ஆம் பாதம்: தடைகள்
இடபம்
ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல், பிரார்த்தனைகள் வழிபாடுகளில் அதிக அக்கறை செலுத்துதல், பெண்களுடன் அனுசரித்து செயல்படவும்.
கிருத்திகை 2, 3, 4: விசித்திரம்
ரோகிணி: இறை நம்பிக்கை
மிருகசீரிடம் 1, 2: நாவடக்கம்
மிதுனம்
சில இடமாற்றங்கள் லாபகரமாக அமையும், இசையில் ஈர்ப்பு அதிகரித்தல், குடும்பத்தில் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: ஆர்வம்
திருவாதிரை: அனுகூலம்
புனர்பூசம்: சுபம்
கடகம்
பணவரவு ஏற்படும், புதிய வேலைப் பணிகளை உடனுக்குடன் முடித்தல், அதிகாரிகளுடன் பொறுமையுடன் செயல்படவும்.
புனர்பூசம்: லாபம்
பூசம்: முன்னேற்றம்
ஆயில்யம்: சஞ்சலம்
சிம்மம்
நவீன திட்டங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும், தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும், செலவுகள் சற்று அதிகரித்தல்.
மகம்: செலவு
பூரம்: துன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: விவாதம்
கன்னி
சுவையான உணவுகளை உண்ணலாம், குடும்பத்தில் பெண்களின் ஆதரவு கிடைக்கும், நட்பு வட்டம் விரிவடைதல்.
உத்திரம் 2, 3, 4: உதவி
அஸ்தம்: ஆகாரம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஒற்றுமை
துலாம்
சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், பொழுதுபோக்குகளில் நாட்டம் அதிகரிக்கும், இடமாற்றங்கள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நன்மை
சுவாதி: மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: ஆசீர்வாதம்
விருட்சிகம்
புதிய வேலைப்பணிகளை நடைமுறைபடுத்தல், பணவரவு ஏற்படும், அதிகாரிகளுடன் நாவடக்கத்துடன் செயல்படவும்.
விசாகம் 4: வரவு
அனுசம்: புதிய முயற்சி
கேட்டை: நிதானம்
தனுசு
செயல்களில் தவறுகள் ஏற்படும், அறிமுகமற்ற நண்பர்களினால் துன்பம், சரும நோய்கள் வந்து நீங்கும்.
மூலம்: பகை
பூராடம்: மனதளர்வு
உத்திராடம் 1ஆம் பாதம்: உபாதைகள்
மகரம்
புதிய முயற்சிகளை நண்பர்களுடன் ஒன்றிணைந்து செய்தல், நல்ல செய்திகள் கிடைக்கும், குடும்பத்தில் உறவினர்களின் வருகை.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: தகவல்
அவிட்டம் 1, 2: நட்பு
கும்பம்
பெண்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும், வெளிபிரயாணங்கள் செல்வதால் நன்மை, விநோதங்களில் மகிழ்ச்சியுடன் ஈடுபடல்.
அவிட்டம் 3, 4: சுபம்
சதயம்: இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: அனுகூலம்
மீனம்
பெரியார்களின் ஆலோசனைகள் கிடைக்கும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், புதிய திட்டங்களை நடைமுறைபடுத்தல்.
பூரட்டாதி 4: ஆதாயம்
உத்திரட்டாதி: நம்பிக்கை
ரேவதி: தொடர்புகள்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .