Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 நவம்பர் 17 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (18.11.2011)
இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 08ஆம் நாள் (18.11.2011) வெள்ளிகிழமை. மரண யோகமும் அஷ்டமி திதியும் ஆயில்யம் நட்சத்திரம் மாலை 03.03 மணிவரை, பின்பு மகம்.
இராகு காலம் : காலை 10.30 முதல் 12.00 மணிவரை
எமகண்டம் : மாலை 03.00 முதல் 04.30 மணிவரை, இரவு 09.00 முதல் 10.30 மணிவரை
நல்ல நேரம் : காலை 09.15 முதல் 10.15 மணிவரை, மாலை 04.45 முதல் 05.45 மணிவரை
மேடம்
நாவுக்கு சுவையான உணவு நிறைவாக கிடைக்கும், முயற்சி செய்த காரியத்தில் வெற்றி, நண்பர்கள் தேடி வருதல்.
அஸ்வினி: ஆரோக்கியம்
பரணி: அனுகூலம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நட்பு
இடபம்
வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் ஏற்படும், தன தான்ய விருத்தி, நல்ல செய்திகள் வந்து சேரும்.
கிருத்திகை 2, 3, 4: தகவல்
ரோகிணி: உயர்வு
மிருகசீரிடம் 1, 2: அதிர்ஷ்டம்
மிதுனம்
உரிய பணவரவுகள் தாமதமின்றி கிடைக்கும், அதிகாரிகளுடன் சுமுகமான முறையில் செயல்படவும், மனதில் சிறு சலனங்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: சங்கடம்
திருவாதிரை: நிதானம்
புனர்பூசம்: சேமிப்பு
கடகம்
உற்சாகத்துடன் நல்ல காரியங்களில் ஈடுபடல், குடும்பத்தில் உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சி, நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
புனர்பூசம்: பிரார்த்தனைகள்
பூசம்: மனநிறைவு
ஆயில்யம்: சந்தோசம்
சிம்மம்
பெண்களின் அன்பும் அக்கறையும் அதிகரிக்கும், புதிய சாதனைகளினால் முன்னேற்றம், நல்ல செய்திகள் கிடைக்கும்.
மகம்: புதிய வழி
பூரம்: அனுசரிப்பு
உத்திரம் 1ஆம் பாதம்: நற்செய்தி
கன்னி
குடும்பத்தாருடன் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளல், சுவையான உணவு கிடைக்கும், இசையில் நாட்டம் அதிகரிக்கும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: பிரயாணம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆகாரம்
துலாம்
புதிய வேலைப் பணிகளை மேற்கொள்ளல், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: முயற்சி
சுவாதி: ஆசீர்வாதம்
விசாகம் 1, 2, 3: தேகசும்
விருட்சிகம்
ஆலய அனுஷ்டானங்களில் நம்பிக்கையுடன் ஈடுபடுதல், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், மனதில் உற்சாகம் ஏற்படும்.
விசாகம் 4: சலுகை
அனுசம்: வழிபாடு
கேட்டை: புத்துணர்ச்சி
தனுசு
மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும், நவீன நுட்பங்களை கையாளுதல், குடும்பத்தில் சுபவிஷேங்கள் நடைபெறும்.
மூலம்: சுபம்
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: அன்யோன்யம்
மகரம்
புதிய காரியங்களை உடனுக்குடன் முடித்தல், பெண்களின் உதவிகள் கிடைக்கும், பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுதல்.
உத்திராடம் 2, 3, 4: மனஅமைதி
திருவோணம்: அனுகூலம்
அவிட்டம் 1, 2: ஆர்வம்
கும்பம்
நவீன வேலைப் பணிகளினால் அதிக லாபம், மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
அவிட்டம் 3, 4: நலன் பதிப்பு
சதயம் : ஆதாயம்
பூரட்டாதி 1, 2, 3: ஒத்துழைப்பு
மீனம்
நிம்மதியான உறக்கம் மனதுக்கு உற்சாகம் தரும், தூய்மையான ஆடைகளை அணியலாம், தனவரவு ஏற்படும்.
பூரட்டாதி 4: லாபம்
உத்திரட்டாதி: நன்மை
ரேவதி: இன்பம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .