Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஒக்டோபர் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (28.10.2011)
இன்று கர வருடம் ஜப்பசி மாதம் 11ஆம் நாள் (28.10.2011) வெள்ளிக்கிழமை. சித்த யோகமும் துவிதியை திதியும் விசாகம் நட்சத்திரம் மாலை 07.55 மணிவரை, பின்பு அனுஷம்.
இராகு காலம் : காலை 10.30 முதல் 12.00 மணிவரை
எமகண்டம் : மாலை 03.00 முதல் 04.30 மணிவரை, இரவு 09.00 முதல் 10.30 மணிவரை
அமாவாஸ்யை தர்ப்பணம்
நல்ல நேரம் : காலை 09.15 முதல் 10.15 மணிவரை, பகல் 04.45 முதல் 05.45 மணிவரை.
மேடம்
வியாபார திட்டங்கள் அலைச்சலை ஏற்படுத்தும், சாப்பாட்டில் வெறுப்பு தன்மை, புதிய காரியங்களில் தடைகள் ஏற்படுதல்.
அஸ்வினி: சிக்கல்
பரணி: பின்னடைவு
கிருத்திகை 1ஆம் பாதம்: விருப்பமின்மை
இடபம்
உரிய பணவரவுகள் தாமதமின்றி கிடைக்கும், அதிகாரிகளுடன் சுமுகமான முறையில் செயல்படவும், மனதில் சிறு சலனங்கள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: பயம்
ரோகிணி: வரவு
மிருகசீரிடம் 1, 2: அனுசரிப்பு
மிதுனம்
திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, தீயவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், புதிய முயற்சிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
மிருகசீரிடம் 2, 3: தடைகள்
திருவாதிரை: கவனம்
புனர்பூசம்: பிரச்சினை
கடகம்
குடும்பத்தில் பெண்கள் அக்கறையுடன் செயல்படல், புதிய செய்திகள் கிடைக்கும், முயற்சி செய்த காரியத்தில் வெற்றி.
புனர்பூசம்: தகவல்
பூசம்: உதவி
ஆயில்யம்: உயர்வு
சிம்மம்
பகைவர்களினால் இடையூறுகள் ஏற்படும், கோபத்தில் பேசும் வார்த்தைகள் சங்கடத்தை தரும், புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.
மகம்: சிக்கல்
பூரம்: பொறுமை
உத்திரம் 1ஆம் பாதம்: தோல்வி
கன்னி
திறமையான வேலைப் பணிகளை மேற்கொள்ளுதல், பணம் சேமிப்பதில் ஊக்கம் தேவை, நல்ல செய்திகள் வந்து சேரும்.
உத்திரம் 2, 3, 4: வாய்ப்பு
அஸ்தம்: தகவல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: உழைப்பு
துலாம்
சிக்கனமற்ற செலவுகளை மேற்கொள்ளுதல், புதிய முயற்சிகள் பின்தள்ளப்படும், செயல்களில் தடுமாற்றங்கள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: விரயம்
சுவாதி: நஷ்டம்
விசாகம் 1, 2, 3: தடங்கள்
விருட்சிகம்
உயர் உத்தியோகத்தர்களுடன் நிதானமாக நடக்கவும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், நவீன வேலைப் பணிகளை மேற்கொள்ளுதல்.
விசாகம் 4: சுபம்
அனுசம்: லாபம்
கேட்டை: மேன்மை
தனுசு
ஒவ்வாத உணவினால் ஆரோக்கியம் பாதிப்படைதல், மனசங்கடங்கள் கவலைகள் வந்து நீங்கும், செயல்களில் தவறுகள் ஏற்படும்.
மூலம்: துக்கம்
பூராடம்: நலன் பாதிப்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: தடுமாற்றம்
மகரம்
ஒவ்வாத உணவினால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும், தேவையற்ற பிரச்சினைகளினால் மனஸ்தாபம், அலைச்சல்கள் அதிகரித்தல்.
உத்திராடம் 2, 3, 4: அலைச்சல்
திருவோணம்: பகை
அவிட்டம் 1, 2: தேகசும்
கும்பம்
தீயவர்களினால் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல், கடின பேச்சுவார்த்தைகளுக்கு இடமுண்டு.
அவிட்டம் 3, 4: நிம்மதியின்மை
சதயம் : வாக்குவாதம்
பூரட்டாதி 1, 2, 3: சோர்வு
மீனம்
மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும், குடும்பத்தில் பெண்கள் பொறுப்புடன் செயல்படல், நட்;;பு வட்டம் விரிவடைதல்.
பூரட்டாதி 4: அனுகூலம்
உத்திரட்டாதி: ஒற்றுமை
ரேவதி: உதவி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .