2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

7 ஆண்டுகளில் முதற் தடவையாக ஈரானிய எண்ணெய்யை வாங்கிய இந்தியா

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 05 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கு பிரச்சினையால் ஹொர்முஸ் நீரிணையூடாக விநியோகங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரானிய எண்ணெய்யை இந்திய எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் வாங்கியுள்ளதாக இந்திய எண்ணெய் அமைச்சு சனிக்கிழமை (04) தெரிவித்துள்ளது.

ஈரானிய மசகெண்ணையை வாங்க வேண்டாமென்ற ஐக்கிய அமெரிக்க அழுத்தத்தைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் ஈரானிடமிருந்து எந்தவொரு சரக்கையும் இந்தியா பெற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட கப்பலில் காணப்பட்ட 44,000 மெற்றிக் தொன்கள் ஈரானிய எல்.பி.ஜியை இந்தியா வாங்கியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .