Editorial / 2019 ஜூன் 25 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரண விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம், மேலும் 4 மாதம் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல், இந்த ஆணையகம் விசாரணை நடத்தி வருகின்றது. எனினும் ஆணையத்தின் கால அவகாசம் ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், அவகாசம் நீடிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நீடிக்கப்பட்ட கால அவகாசமும் நேற்றுடன் நிறைவடைந்தமையால், தமிழக அரசாங்கம் மேலும் 4 மாதம், கால அவகாசத்தை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தர்மயுத்தம் என்ற பெயரில் போராட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொண்டார்.
இதன்போதே, பழனிசாமியின் பணிப்புரைக்கமைய ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையகம் அமைக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago