2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கங்கள்

Freelancer   / 2023 ஏப்ரல் 23 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவின் கெபுலாவான் பட்டு பிரதேசத்தில் இன்று அதிகாலையில், சுமார் 6 மெக்னிடியூட் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை முதல் நிலநடுக்கம், 6.1 மெக்னிடியூட் அளவிலான கெபுலாவான் பட்டுவைத் தாக்கியது. அதைத் தொடர்ந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு 5.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நிலநடுக்கம் 43 கிலோமீற்றர் ஆழத்திலும், இரண்டாவது நிலநடுக்கம் 40 கிலோமீற்றர் ஆழத்திலும் ஏற்பட்டதாக  ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .