Freelancer / 2026 பெப்ரவரி 22 , மு.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலகளாவிய ரீதியிலான இறக்குமதி வரிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 15 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளார்.
தனது சமூக ஊடகத்தளத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி ட்ரம்பின் விரிவான வரி விதிப்புத் திட்டங்களை ரத்து செய்த அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் முடிவை, கடுமையான அமெரிக்க எதிர்ப்பு முடிவு என அவர் விமர்சித்துள்ளார்.
அந்தத் தீர்ப்பை முழுமையாக மீளாய்வு செய்த பின்னரே, இந்த அதிரடி வரி உயர்வு முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
முதலில் 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அது 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவினால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரக்கூடும் என்பதால் உலகளாவிய வர்த்தகச் சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (a)
59 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
6 hours ago