2026 மார்ச் 26, வியாழக்கிழமை

இளைஞர்கள் காட்டிய சாகசத்தால் யுவதி உயிரிழப்பு

Ilango Bharathy   / 2023 மார்ச் 12 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மராட்டிய மாநிலத்தில் இளைஞர்கள் செய்த மோட்டார் சைக்கிள் சாகசத்தால் யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம், புனே நகரில் சமூக ஊடகங்களில்  பிரபலம் அடைவதற்காக, இளைஞர்கள் இருவர் வீதியில் மோட்டார் சைக்கிள் சாகசம் புரிந்து அதனை வீடியோவாக எடுத்துள்ளனர்.  

இதன்போது குறித்த வீதியில் நடந்து சென்ற இளம் யுவதியொருவர் மீது குறித்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.

இவ்விபத்தில் ‘பெரோஸ் பதான்‘  என்ற குறித்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற இரு இளைஞர்களையும்  கைதுசெய்துள்ள பொலிஸார், இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .