2025 மே 12, திங்கட்கிழமை

உக்ரைனின் வான்வழித் தாக்குதலில் எட்டு பேர் காயம்

Simrith   / 2024 மே 09 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைனின் வான்வழித் தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்துள்ளதுடன் ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் கார்கள் சேதமடைந்தன என்று உக்ரைன் எல்லையில் உள்ள பிராந்தியத்தின் ஆளுநர் வியாழக்கிழமை (மே 9) தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் 19 கட்டிடங்களில் உள்ள சுமார் 34 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நகரத்தில் சுமார் 30 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக டெலிகிராம் என்ற செய்தியிடல் செயலியில் அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் RM-70 Vampir அமைப்பிலிருந்து ஏவப்பட்ட 15 ராக்கெட்டுகளையும், அப்பகுதியில் ஒரு ட்ரோனையும் அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் மூன்று ஆளில்லா விமானங்களும், பிரையன்ஸ்க் பகுதியில் இரண்டு விமானங்களும் வீழ்த்தப்பட்டதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், உக்ரைனில் இருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ரஷ்யாவிற்குள் இராணுவம், எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பை அழிப்பது மொஸ்கோவின் ஒட்டுமொத்த போர் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று கெய்வ் கூறினார்.

மேலும் இரண்டு முன்னணி கிராமங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக ரஷ்யா கூறுகிறது

இதற்கிடையில், மொஸ்கோ மேலும் இரண்டு முக்கிய கிராமங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகக் அறிவித்துள்ளது. ரஷ்யப் படைகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போரில் போராடி வரும் உக்ரேனிய துருப்புக்களுடன் நிலம் மற்றும் வானத்தில் இருந்து அதன் தாக்குதல்களை அதிகரித்துள்ளன. 

சமீபத்திய வளர்ச்சியில், புதன்கிழமை உக்ரைனின் வடகிழக்கு கார்கிவில் உள்ள பாடசாலை மைதானத்தில் ரஷ்யா வான் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் குறைந்தது நான்கு குழந்தைகள் மற்றும் மூன்று பெரியவர்கள் காயமடைந்ததாக தெரிய வந்துள்ளது.

உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவின் தாக்குதல் "வேண்டுமென்றே, கணக்கிடப்பட்ட மற்றும் தந்திரமான செயல்" என்று தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X