2026 மே 09, சனிக்கிழமை

dd

உக்ரைனிலுள்ள சீனர்கள் வெளியேறுவது தாமதிக்கும்

Freelancer   / 2022 மார்ச் 02 , பி.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைனிலுள்ள சீன குடிமக்களை திட்டமிட்டு வெளியேற்றுவது தாமதமாகும் என்று உக்ரைன் தலைநகர் கெய்விலுள்ள பீய்ஜிங்கின் உயர்மட்ட தூதுவர் எச்சரித்துள்ளளார்.

உயர் பாதுகாப்பு அபாயங்கள் உள்ள காலகட்டத்தில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

 கிய்வில் இருந்து விமானங்களை ஏற்பாடு செய்வதாக சீனத் தூதரகம் முன்னதாக கூறியதுடன், வெளியேற விரும்புவோர் தமது இணையதளத்தில் பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டது.

எனினும், தூதரகத்தின் வீசட் கணக்கில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட 10 நிமிட வீடியோ செய்தியில் கீழுள்ள விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சீனர்களுக்கான கடுமையான பாதுகாப்பு நிலைமை குறித்து எச்சரித்த   தூதுவர் ஃபேன் சியான்ராங், அதிகரித்துவரும் பாதுகாப்பு நிலைமையின் காரணமாக அந்த வெளியேற்றத் திட்டங்கள் தொடராது என்று தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .