Freelancer / 2022 பெப்ரவரி 14 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யா - உக்ரைன் இடையே எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருவதால், உக்ரைனுடனான விமான போக்குவரத்தை சில நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன.
டச் விமான நிறுவனமான கே.எல்.எம். மறு அறிவிப்பு வரும் வரை உக்ரைனுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
உக்ரேனிய ஏர்லைன் ஸ்கைஆப் நிறுவனத்தின் ஐரீஸ் குத்தகைதாரர் உக்ரேனிய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை செய்வதாக அறிவித்ததை அடுத்து போர்ச்சுக்கல்லில் இருந்து உக்ரைனின் கீவ் நகருக்கு சென்ற விமானம் மால்டோ வன் தலைநகர் சிசினாவுக்கு திருப்பி விடப்பட்டது.
இதேபோல் சில நாடுகளும் உக்ரைனுடனான விமான போக்குவரத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
50 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
6 hours ago
09 May 2026