Ilango Bharathy / 2022 பெப்ரவரி 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 4ஆவது நாளாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ரஷ்யப் படையினரால் உக்ரைனில் இணைய சேவைகள் வழங்கி வந்த நிறுவனங்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தங்கள் நாட்டிற்கு இணைய சேவை வழங்குமாறு உக்ரைனின் துணை பிரதமர் மைக்கைலோ பெடோரோவ், உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க்கிடம் (Elon musk) கோரிக்கை விடுத்தார்.

இந் நிலையில் உக்ரைனுக்கு உதவும் வகையில் ”தனது நிறுவனமான ‘ஸ்டார்லிங்க்‘ மூலம் இணைய சேவையை உக்ரைனுக்கு வழங்குவதாக” எலோன் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதே போல் கூகுல் நிறுவனம் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கூகுள் இணையதளங்களிலும், கூகுளுக்கு சொந்தமான அப்கள் மற்றும் யூடியூப் உள்ளிட்டவற்றிலும் ரஷ்யாவின் நாட்டின் அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் விளம்பரங்கள் மூலம் பெறும் வருமானத்திற்கு தடை விதித்துள்ளது.
இத் தகவலை கூகுள் நிறுவனத்தின் தலைமை அமைப்பான ஆல்பாபெட் அறிவித்துள்ளது.
47 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago