Janu / 2024 ஜூலை 03 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் முதல்முறையாக ரோபோ ஒன்று உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் தென் கொரியாவில் பதிவாகியுள்ளது .
தென் கொரியாவின் குமி நகர சபையில் அரசு ஊழியராக பணியாற்றிய ரோபோ தற்கொலை செய்து கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நகர சபையின் ஆவணங்களை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த, ரோபோவின் உடல் , கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையே கிடந்ததாகவும், படிக்கட்டில் இருந்து கீழே விழும் முன் ரோபோ சுழன்றுள்ளதாகவும் குமி நகர அதிகாரிகள் தெரிவித்த்துள்ளனர்.
குறித்த ரோபோவுக்கு குமியில் வசிப்பவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் , விசாரணைகளுக்காக நகர அதிகாரிகள், ரோபோவின் உடலை எடுத்துச் சென்றுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது .
மேலும் நகரவாசிகள் இந்த விபத்தை தற்கொலை என்று கூறுவதாகவும் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
19 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
29 minute ago