2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஒபாமாவிடம் மன்னிப்புக் கோரினார் டுட்டேர்ட்டே

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்போது ஐ.அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமாவை, தவறான சொற்களைக் கொண்டு அழைத்தமைக்காக, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டே, மன்னிப்புக் கோரியுள்ளார்.

ஜனாதிபதி டுட்டேர்ட்டேயின், வன்முறை மிகுந்த, “போதைப்பொருளுக்கு எதிரான போர்” தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தமைக்காக, 2016ஆம் ஆண்டு, பராக் ஒபாமாவை, “பாலியல் தொழிலாளியின் மகன்” என, ஜனாதிபதி டுட்டேர்ட்டே அழைத்திருந்தார்.

தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான உறவு, முன்னேற்றகரமான நிலையில் காணப்படும் நிலையில், தற்போது பொதுமகனாக பராக் ஒபாமா மாறியுள்ளதால், மன்னிப்புக் கோருவதாக, ஜனாதிபதி டுட்டேர்ட்டே குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X