2026 பெப்ரவரி 01, ஞாயிற்றுக்கிழமை

கொங்கோவில் சுரங்கம் தகர்ந்ததில் 200 பேர் பலி

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 01 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில் சுரங்கமொன்று தகர்ந்ததில் 200 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடும் மழையையடுத்து புதன்கிழமை (28) சுரங்கம் தகர்ந்ததாக வட கிவு பிராந்தியத்தின் ஆளுநரின் பேச்சாளர் லும்பா கம்பெரே முயிசா தெரிவித்துள்ளார்.

திறன்பேசிகள், கணிணிகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கனிமமான கோல்டானை அகழுவதில் பெண்கள், சிறுவர்களும் ஈடுபட்டிருந்தபோதே சுரங்கம் தகர்ந்துள்ளது.

தப்பித்த 20 பேரளவானோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X