2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘கப்பலில் தீ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது’

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 08 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயின் ஜபல் அலி துறைமுகத்திலுள்ள கப்பல் ஒன்றில், வெடிப்பு ஒன்றால் ஏற்பட்ட தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக, டுபாய் ஊடக அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.

தீப்பற்றக்கூடிய பொருள்களைக் கொண்டிருந்த கொள்கலன் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பானது வழமையான சம்பவம் ஒன்று என ஊடக அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் மொனா அல் மரி தெரிவித்துள்ளார்.

துறைமுகத்திலிருந்து 15 கிலோ மீற்றர் தூரத்திலிருந்து 22 கிலோ மீற்றர் தூரம் வரையிலான வசிப்பிடப் பகுதியிலுள்ளோர் குறித்த வெடிப்பின் சத்தத்தைக் கேட்டுள்ளனர்.

 

இந்நிலையில், எதுவித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என அறிக்கை ஒன்றில் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .