Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Ilango Bharathy / 2021 நவம்பர் 17 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்குப் பரிசளிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெல்பர்ன் நகரில் அமைந்துள்ள அவுஸ்திரேலிய-இந்திய சமூக மையத்திற்கு, இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தியின் உருவ சிலையொன்று பரிசளிக்கப்பட்டது.
இதனை அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரீசன் கடந்த 12ஆம் திகதியன்று திறந்து வைத்துள்ளார்.
எனினும் திறந்துவைக்கப்பட்ட சிலமணிநேரங்களிலேயே குறித்த சிலையானது , மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து ”கலாச்சார நினைவு சின்னங்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.இந்த அளவிற்கு அவமரியாதை செய்வது வெட்கக்கேடானது என பிரதமர் ஸ்காட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
8 hours ago
26 Apr 2024