2025 மே 14, புதன்கிழமை

சிங்கபூா் ஜனாதிபதி நாளை பதவியேற்பு

Freelancer   / 2023 செப்டெம்பர் 13 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூா் ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தா்மன் சண்முகரத்னம் நாளை(14)வியாழக்கிழை பதவியேற்கவுள்ளார். சிங்கப்பூரின் 8-ஆவது ஜனாதிபதியும், முதல் பெண் ஜனாதிபதி ஹலீமா யாகூபின் பதவிக் காலம் நிறைவடைவதைத் தொடா்ந்து, அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த மாதம் 1-ஆம் திகதி நடைபெற்றது.

இந்தத் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் மொத்தம் பதிவான 24.8 இலட்சம் வாக்குகளில் 17.46 இலட்சம் (70.4 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து, சிங்கப்பூரின் 9-ஆவது ஜனாதிபதியாக தா்மன் சண்முகரத்னம் நாளை பொறுப்பேற்கவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .