Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 ஏப்ரல் 16 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிட்னியில் உள்ள அசிரிய தேவாலயத்தில் நடந்த ஆராதனையின் போது கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலின் போது அந்த தேவாலயத்தை சேர்ந்த பிஷப் காயம் அடைந்தார்.இந்நிலையில், இந்த தாக்குதல் மத தீவிரவாதத்தால் தூண்டப்பட்ட பயங்கரவாத செயல் என்று அவுஸ்திரேலிய பொலிஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
மேற்கு சிட்னியின் புறநகர் பகுதியான வேக்லியில் திங்கள்கிழமை நேரலையில் ஒளிபரப்பப்பட்ட தேவாலய சேவையின் போது அசிரியன் கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்தின் பிஷப் மார் மாரி இம்மானுவேல் உட்பட குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர்.இந்த சம்பவம் தேவாலயத்திற்கு வெளியே இருந்த பொலிஸாருக்கும், தாக்கியவரை தங்களிடம் ஒப்படைக்கக் கோரிய பிஷப்பின் சீடர்களின் கோபமான கூட்டத்திற்கும் இடையே மோதல்களைத் தூண்டியது.
திங்கள்கிழமை சம்பவ இடத்தில் ஓர் இளைஞனைக் கைது செய்த பொலிஸார் வழிபாட்டாளர்கள் கூட்டம் வெளியே திரண்டதால், கைது செய்யப்பட்டவரின் சொந்த பாதுகாப்பிற்காக தேவாலயத்தில் அவரைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது."எல்லா விஷயங்களையும் பரிசீலித்த பிறகு, இது ஒரு பயங்கரவாத சம்பவம் என்று நான் அறிவித்தேன்." என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.தாக்குதல் நடத்திய ஆண் தனது வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள தேவாலயத்திற்கு கத்தியுடன் பயணித்ததால், "ஒருவித திட்டமிடல்" இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.ஆனால் இந்த விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் தாக்குதல் நடத்தியவர் தனியாக செயல்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
8 hours ago
29 Apr 2024
29 Apr 2024