2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு

Editorial   / 2025 டிசெம்பர் 24 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த எப்ஸ்டீன் ஆவணங்கள் பொய்யானவை என்று அமெரிக்க நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல அமெரிக்க நிதியாளர் ஜெப்ரி எப்ஸ்டீன், சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். அவர் மீதான விசாரணை ஆவணங்களில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியது. குறிப்பாக, பல ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவரை டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் எப்ஸ்டீன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, எப்ஸ்டீன் ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது. இது வெளியான 24 மணிநேரத்தில் ஆவணங்களில் இடம்பெற்றிருந்த டிரம்ப் தொடர்பாக போட்டோக்கள், எந்தவித விளக்கமும் இன்றி நீக்கப்பட்டன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் அந்தப் போட்டோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இந்த நிலையில், டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது. குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்று தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'எப்ஸ்டீன் தொடர்பான 30 ஆயிரம் பக்க ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2020ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக எப்பிஐயிடம் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான உண்மையில்லாத குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவை முழுக்க முழுக்க அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாகும். எனவே, இது அதிபர் டிரம்புக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்பட்டிருப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.

சட்டத்தின் மீதான நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை பாதுகாக்கும் விதமாக, இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. லேரி நசாருக்கு எப்ஸ்டீன் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தின் உண்மைத் தன்மையை நீதித்துறை ஆய்வு செய்து வருகிறது. விரைவில் கூடுதல் தகவல்களை வழங்க முயற்சிப்போம்.

இந்தக் கடிதத்தில் உள்ள அஞ்சல் குறியீடு விர்ஜினியாவைச் சேர்ந்தது. அந்த சமயத்தில் எப்ஸ்டீன் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பதில் முகவரியும் தவறாக இருந்தது. அதில், எப்ஸ்டீனின் கைதி எண் குறிப்பிடவில்லை. அனைத்திற்கும் மேலாக எப்ஸ்டீன் மரணமடைந்த 3 நாட்களுக்குப் பிறகே, இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், அந்தக் கடிதத்தில் இருந்த கையெழுத்து எப்ஸ்டீனின் கையெழுத்துடன் பொருந்தவில்லை. எனவே, லேரி நசாருக்கு எப்ஸ்டீன் அனுப்பிய கடிதம் போலியானது என தெரியவந்துள்ளது. இருப்பினும், சட்ட ரீதியாக தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் நீதித்துறை தொடர்ந்து வெளியிடும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X