2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தடுப்பூசி செலுத்த மறுத்தால் மாதந்தோறும் அபராதம்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 03 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிரீஸ் நாட்டில் முதியவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள மறுத்தால், அவர்களுக்கு மாதந்தோறும் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு  பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்( Kyriakos Mitsotakis) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” நாட்டில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் அனைவரும், வரும் ஜனவரி மாதம் 16ஆம் திகதிக்குள் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள பதிவு செய்துவிட வேண்டும். இல்லையெனில், அவர்கள் மாதந்தோறும் 100 யூரோக்கள் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.

புதிய கொரோனா மாறுபாடு பரவி வருவதாலும், பனிக்காலம் நெருங்குவதாலும், அந்நாட்டு அரசு இவ்வாறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகதத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது அதிக அபராதம் என்றும் முதியவர்களுக்கு ஓய்வூதியமே 730 யூரோக்கள் தான் என்றும் சிலர் குற்றம்சாட்டி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

 1) கிரீஸ்

3) தடுப்பூசி செலுத்த மறுத்தால் மாதந்தோறும் அபராதம்

கிரீஸ் நாட்டில் முதியவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள மறுத்தால், அவர்களுக்கு மாதந்தோறும் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு  பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்

( Kyriakos Mitsotakis) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” நாட்டில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் அனைவரும், வரும் ஜனவரி மாதம் 16ஆம் திகதிக்குள் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள பதிவு செய்துவிட வேண்டும். இல்லையெனில், அவர்கள் மாதந்தோறும் 100 யூரோக்கள் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.

புதிய கொரோனா மாறுபாடு பரவி வருவதாலும், பனிக்காலம் நெருங்குவதாலும், அந்நாட்டு அரசு இவ்வாறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகதத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது அதிக அபராதம் என்றும் முதியவர்களுக்கு ஓய்வூதியமே 730 யூரோக்கள் தான் என்றும் சிலர் குற்றம்சாட்டி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .