2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தடுப்பூசி செலுத்தாத 800 பேர் பணி இடை நீக்கம்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 05 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாத்  தடுப்பூசியைச்  செலுத்திக் கொள்ளாத ஊழியர்கள் 800 பேரை எயார் கனடா (Air Canada)நிறுவனம் பணி இடை நீக்கம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனாத் தொற்றுப்  பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் விமானப் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது.


மேலும், விமான நிலைய  ஊழியர்களும் , பயணிகளும்   கட்டாயம் கொரோனாத் தடுப்பூசியைச்  செலுத்திக் கொள்ள  வேண்டும் எனவும் விமான நிறுவனங்கள் அறிவுறுத்தி வருகின்றன.

இந் நிலையில், கொரோனா தடுப்பூசி போடாத 800க்கும் மேற்பட்ட ஊழியர்களை எயார் கனடா நிறுவனம் அதிரடியாக பணி இடை நீக்கம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த ஊழியர்கள் அனைவரும் 2 ஆம் கட்டத் தடுப்பூசியையும் செலுத்திய பின்னரே பணியில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .