Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2025 மே 11 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாக பலுசிஸ்தான் உள்ளது. ஆனால், பாகிஸ்தான் அரசு தங்களை புறக்கணிப்பதாகவும், பலூச் பகுதியை தனி நாடாக அறிவிக்க கோரியும் அங்குள்ள பலூச் விடுதலைப் படையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பலூச் மக்களும் தங்கள் பங்குக்கு பாகிஸ்தானுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் 12 பாகிஸ்தான் ராணுவத்தினர் சென்ற வாகனத்தை வெடி வைத்து தகர்த்தனர். பலூச் மாகாண தலைநகர் குவெட்டாவை கைப்பற்றி விட்டதாகவும் பலூச் விடுதலைப் படை அமைப்பினர் அறிவித்துவிட்டனர்.
அங்குள்ள பிரபல எழுத்தாளர் மிர் யார் பலூச் கூறும்போது, ‘‘பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் தனி நாடாகி விட்டது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும். புதிய அரசிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்படும். எனவே, டெல்லியில் பலுசிஸ்தான் தூதரகத்தை தொடங்க அனுமதிக்க வேண்டும். ஐ.நா. பலுசிஸ்தானுக்கு அமைதி படையை அனுப்ப வேண்டும். தனி நாடாக பலுசிஸ்தானை அங்கீகரிக்க வேண்டும்’’ என்று பகிரங்கமாகவே கூறியுள்ளார்.
பாகிஸ்தான் முஸ்லிம் நாடாக இருந்தாலும், அதன் பலூசிஸ்தானில் இந்துக்களும் சிறுபான்மையினராக இருக்கின்றனர். பாகிஸ்தான் மக்கள் தொகையில் 6 சதவீதம் மக்கள் பலூச் பகுதியில் உள்ளனர். ஆனால், நிலப்பரப்பு மட்டும் 45 சதவீதம். அந்தளவுக்கு மிகப்பெரிய மாகாணம். தனிமங்கள் கொட்டிக் கிடக்கும் இடம். இந்துக்களுக்கு பலுசிஸ்தானுக்கும் உள்ள தொடர்பை இங்குள்ள ஹிங்குலாஜ் அம்மன் கோயில்தான் உறுதி செய்கிறது. இந்தியாவின் 54 சக்தி பீடங்களில் ஹிங்குலாஜ் கோயிலும் ஒன்று.
ஹிங்குலி என்பதற்கு சிந்தி மொழியில் முன் நெற்றி பொட்டு அல்லது குங்குமம் என்று அர்த்தம். பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலுக்கு ‘சிந்தூர்’ என்று பிரதமர் மோடி பெயர் வைத்துள்ளது மிகப் பொருத்தமாக இருப்பதை அறிய முடியும். இங்குள்ள அம்மனுக்கு செந்தூரத்தில்தான் அலங்காரம் செய்கின்றனர். இந்த கோயிலும் குகையில்தான் அமைந்துள்ளது. பலுசிஸ்தானின் லயரி தாசில் மலைப் பகுதியில் கோயில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலைப் பகுதியில் உள்ள கோயிலுக்கு இந்துக்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரையும் மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சம் இந்துக்கள் இந்தக் கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த கோயிலை ஹிங்லாஜ் தேவி, ஹிங்குலா தேவி மற்றும் நானி மந்திர் கோயில் என்று மக்கள் அழைக்கின்றனர்.
பாகிஸ்தான் அரசின் புறக்கணிப்பு, சீனாவின் கட்டுமானப் பணிகளால் பாதிப்பு போன்றவற்றால் விரக்தியில் உள்ள பலுசிஸ்தான் மக்கள், தங்களை தனி நாடாக அறிவிக்க கோரி போராடி வருகின்றனர். இந்தியா மீதும் இந்திய மக்கள் மீதும் பலூச் மக்கள் வைத்திருக்கும் அந்த நம்பிக்கை நிறைவேறுமா என்பதற்கு காலம் பதில் சொல்லும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025