2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - 18 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

இவ் அமைப்புகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் நைஜர் மாகாணத்தின் மசகுஹா கிராமத்தில் நேற்று முன்தினம் உள்ள பள்ளிவாசலுக்குள்  நுளைந்த மர்ம நபரொருவர் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இத்துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்தனர் எனவும் மேலும், பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .