2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தாய்வானில் கொடூரத் தீ விபத்து; 46 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 14 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்வானில் காஹ்சியுங் நகரிலுள்ள 13 மாடி கட்டிடமொன்றில் இன்று (14)  அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 40 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும்  அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் காயமடைந்தவர்கள்  தீயணைப்பு படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக்  கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் , உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுவதாகவும்   தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களைப்  பெரும் சோகத்தில்  ஆழ்த்தியுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .