2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

​திடீரென காணாமல் போன இந்திய மத்திய அமைச்சர் பயணித்த விமானம்

Editorial   / 2018 ஜூன் 04 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பயணித்த விமானம் திடீரென தொடர்பு எல்லையிலிருந்து விலகி சென்றிருந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை(02), திருவனந்தபுரத்தில் இருந்து மொரீசியஸ் தீவு நோக்கி, பயணித்துக்கொண்டிருந்த விமானம், சுமார் 12 முதல் 14 நிமிடங்கள் வரை அந்நாட்டு தகவல் தொடர்பு எல்லையில் இருந்து விலகி இருந்ததுள்ளது.

எனினும் சில நிமிடங்களின் பின்னர், குறித்த விமானம், கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பான முறையில், தரையிறக்கப்பட்டுள்ளது.

நடுவானில் பயணித்துக்கொண்டிருந்த போது, குறித்த விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாகவே தொடர்பு எல்லையிலிருந்து விலகி சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X