2026 பெப்ரவரி 06, வெள்ளிக்கிழமை

நைஜீரியாவில் தாக்குதல்களில் 191 பேரைக் கொன்ற துப்பாக்கிதாரிகள்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 05 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய, வட நைஜீரியாவின் ஒதுக்குப்புற கிராமங்களில் இடம்பெற்ற வெவ்வேறான தாக்குதல்களில் 191 பேரை ஆயுதந் தரித்தோர் கொன்றதாக உள்ளூர் மக்கள் பிரதிநிதி, அங்குள்ளோர், பொலிஸார் புதன்கிழமை (04) தெரிவித்துள்ளனர்.

மத்தியா கவரா மாநிலத்தில் வொரொ சமூகத்தை செவ்வாய்க்கிழமை (03) துப்பாக்கிதாரிகள் தாக்கியதாகவும், குறைந்தது 170 பேர் கொல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் பிரதிநிதி கூறியுள்ளார்.

இஸ்லாமிய ஆயுததாரிகள் என நம்பப்பரும் துப்பாக்கிதாரிகள், நைஜீரிய அரசுக்கான ஆதரவைக் கைவிட்டு ஷரியா இஸ்லாமியச் சட்டத்துக்கு மாறுமாறு உள்ளூரில் இருப்போரை வலியுறுத்துவதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வடக்கு கட்சியா மாநிலையில் குறைந்தது 21 பேரை துப்பாக்கிதாரிகள் கொன்றதாக அங்குள்ளோர், உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X