2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பிரதமருக்கு எதிராக மாபெரும் போராட்டம்

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 11 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இஸ்ரேலின் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு,  நீதித்துறையின் அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் அளிக்கும் மசோதாவை அண்மையில் நிறைவேற்றினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்நாட்டு மக்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் இம் மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும், நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக லட்சக்கணக்கான  மக்கள் டெல் அபூஸ் பகுதியில் திரண்டு  போராட்டம் நடத்தியுள்ளமை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .