2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பெண்களின் பிணத்தை தோண்டி எடுத்து பலாத்காரம்... கல்லறைகளுக்கு பூட்டு

Freelancer   / 2023 ஏப்ரல் 29 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பல பெண்கள் கல்லறைகளில் பூட்டுப் போட்டு வைக்கும் படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில், இப்போது அது வெளியாகி அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது. 

அதாவது பாகிஸ்தான் பெற்றோர்கள் தங்கள் இறந்த மகள்களைக் கூட பலாத்காரத்தில் இருந்து பாதுகாக்க வேண்டி உள்ளதாகவும் இதன் காரணமாகக் கல்லறைக்கும் பூட்டுப் போட்டு வைக்க வேண்டி இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். 

பாகிஸ்தான் நாட்டில் பிணத்துடன் பாலியல் உறவு கொள்ளும் நெக்ரோபிலியா கேஸ்கள் அதிகரித்துள்ளதே பெற்றோர்கள் இதுபோல செய்யக் காரணமாக இருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். கடும் கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடாகக் கூறிக் கொண்டாலும் பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

வக்கிர எண்ணம் கொண்ட சிலர் தங்கள் இச்சையைத் தணிக்க இறந்த உடல்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்கள். பாகிஸ்தானில் பரவலாக அதிகரிக்கும் இந்த நெக்ரோபிலியாவை கருத்தில் கொண்டு அங்குள்ளவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைக் காப்பாற்ற இப்படி கல்லறைக்கும் பூட்டை போட்டு வைக்கிறார்கள். 

இது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. 

பாகிஸ்தான் நாட்டில் பெண்களின் உடல்கள் பல நேரங்களில் தோண்டி எடுக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கராச்சியின் வடக்கு நாஜிமாபாத்தில் உள்ள கல்லறையில் பணிபுரியும் முஹம்மது ரிஸ்வான் என்ற காவலர் 48 பெண் சடலங்களை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். 

அங்கே 2011ஆம் ஆண்டு முதலே இதுபோன்ற நெக்ரோபிலியா வழக்குகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது வன்முறையை அனுபவிப்பதாகவே அந்நாட்டின் மனித உரிமைகளுக்கான தேசிய ஆணையம் கூறுகிறது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .