2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெலாரஸ் எல்லையில் அகதிகளை முடக்கிய போலந்து

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 09 , பி.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெலாரஸுடனான போலந்தின் கிழக்கு எல்லையில் போலந்துக்குள் நுழைய முயன்ற அகதிகளின் முயற்சிகளை முறியடித்துள்ளதாக போலந்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நெருக்கடி சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுத்திருந்த போலந்து அரசாங்கம், பிராந்தியத்தில் 12,000 படைகளைத் தரையிறக்கியிருந்தது.

எல்லையை நோக்கி அகதிகளை பெலாரஸ் தள்ளுவதாக பெலாரஸை போலந்து குற்றஞ்சாட்டியுள்ளது.

அண்மைய மாதங்களில் சட்ட ரீதியற்ற முறையில் பெலாரஸிலிருந்து தமது நாடுகளுக்குள் நுழைய முயல்வோரின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாக போலந்து, லித்துவேனியா, லத்தீவியா ஆகியன தெரிவித்துள்ளன.

இந்த அகதிகளில் பெரும்பாலோனோர் மத்திய கிழக்கு, ஆசியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .