2025 மே 15, வியாழக்கிழமை

மனநல சிகிச்சைக்காக மேஜிக் காளான்

Freelancer   / 2023 ஜூலை 02 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகிலேயே முதல் நாடாக ஆஸ்திரேலியா, மனநிலை சம்மந்தப்பட்ட சில  பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க சைகடெலிக்ஸ்-ஐ சட்டபூர்வமாக பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் போதைப்பொருள் கண்காணிப்பு அமைப்பான தெரப்யூடிக் குட்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (TGA) கிட்டத்தட்ட மூன்று வருட ஆலோசனைக்குப் பிறகு இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம் ஜூலை 1 முதல், ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்கள் PTSD எனும் மனநிலை சிகிச்சைக்கு எக்ஸ்டசி என அழைக்கப்படும் MDMA மற்றும் மேஜிக் காளான்களை பரிந்துரைக்க இது வழிவகை செய்கிறது. MDMA மற்றும் மேஜிக் காளான்கள் இரண்டு மருந்துகளும்  ஆஸ்திரேலியாவில் தடைசெய்யப்பட்ட பொருட்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

மனச்சோர்வு மற்றும் மன உளைச்சலுக்குப் பிறகான மன அழுத்தக் கோளாறு (PTSD) சிகிச்சைக்காக, MDMA மற்றும் மேஜிக் காளான்களை பரிந்துரைக்க மருத்துவர்களை அனுமதித்த உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .