2025 ஜூலை 19, சனிக்கிழமை

ரஷ்ய பிரதமரையும் விட்டுவைக்காத கொரோனா

Editorial   / 2020 மே 01 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, தம்மை தாமே தனிமைப்படுத்திக் கொள்வதாக, ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஸ்சுஸ்டின் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. 

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து சில நாள்கள் வீட்டில் தம்மை தாமே தனிமைப்படுத்திக் கொள்வதாக அவர் அறிவித்தார்.

இருப்பினும், அவரது உடல்நிலை சற்று மோசமடைந்ததையடுத்து, போரிஸ் ஜான்சன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

ஒரு வாரத்துக்கும் மேலான சிகிச்சைக்கு பிறகு அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) வீடு திரும்பினார்.

இந்த நிலையில் தற்போது, ரஷ்ய பிரதமர் மிக்கல் மிஸ்சுஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, வீட்டில் தம்மை தாமே தனிமைப்படுத்திக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். 

தமது அமைச்சரவை சகாக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X