2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2023 மே 08 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வணிக வளாகமொன்றில் நேற்று முன்தினம் ( 06) மர்ம நபரொருவர்  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டல்லாஸ் என்ற நகரில் உள்ள வணிக  வளாகமொன்றிலேயே இக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்து  இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் துப்பாகிச்சூடு நடத்தியவரும் உயிரிழந்து இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .