2025 நவம்பர் 05, புதன்கிழமை

விமானம் பற்றி கூறுவவோருக்கு சன்மானம் வழங்குவதாக அறிவிப்பு

Editorial   / 2019 ஜூன் 10 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாயமான இந்திய விமானம் பற்றியத் தகவல் வழங்குவோருக்கு, 5 இலட்சம் இந்திய ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என, விமானப்படை அறிவித்துள்ளது.

விமானத்தை தேடும் பணிகளை, நேற்று (09), 7ஆவது நாளாக விமானப்படை முன்னடுத்த போதிலும், எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் மாயமான விமானம் குறித்து தகவல்களை வழங்குபவர்களுக்கு 5 இலட்சம் இந்திய ரூபாய் சன்மானமாக வழங்கப்படுமென இந்திய விமான படையின் எயார் மார்ஷல் ஆர்.டி.மாத்தூர் அறிவித்துள்ளார்.

அசாம் மாநிலம்- ஜோர்கத் விமானப்படை தளத்திலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படையின் ஏ.என்-32 ரக விமானம் கடந்த 4ஆம் திகதி, 13 பேருடன் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X