2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சுபியான் சேர்மன் வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது ஹமீதியா அணி

Super User   / 2014 ஜூன் 04 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்

சிராஜ் நகர் கொம்பியுடர் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுபியான் சேர்மன் கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முள்ளிப்பொத்தானை ஹமீதியா அணி வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை (03) மாலை சிராஜ் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 34 அணிகள் பங்குகொண்ட இந்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிக்கு அறபா அல்ஹிக்மா மற்றும் ஹமீதிய ஆகிய அணிகள் தெரிவாகியிருந்தன.

இவ்விரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஹமீதியா அணி வெற்றி பெற்றது.
 
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியான்; கலந்துகொண்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .