2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கால்பந்தாட்ட பயிற்சி முகாம்

George   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


யாழ். மாவட்ட சிறுவர் கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி முகாம், நேற்று சனிக்கிழமை (06) சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

யாழ். மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த பயிற்சி முகாம் நடைபெறுகின்றது.

சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த, பீபா அமைப்பின் உறுப்பினர் வின்சன் சுப்பிரமணியம் கருத்துரைகளையும் பயிற்சிகளையும் வழங்கி வருகின்றார்.

இந்த பயிற்சி முகாமில் சிறுவர்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சிகளை வழங்கி, எவ்வாறு கால்பந்தாட்ட விளையாட்டில் ஊக்கப்படுத்தலாம் என்பது தொடர்பான கருத்துரைகள் வின்சன் சுப்பிரமணியத்தால் வழங்கப்பட்டது.

மேலும், கால்பந்தாட்ட உத்திகள், மற்றும் வீரர்கள் போட்டிகளுக்கு தங்களை எவ்வாறு தயார்ப்படுத்துதல் என்பன போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .